ஜம்மு: எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், F-16 போர் விமானங்களை நிறுத்துவதாக கூறப்படுவதால், புதிய வெடிபொருட்களை உடனடியாக வழங்குமாறு, இந்திய விமானப்படை கோரியிருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது. எல்லையில் பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. இதன் எதிரொலியாக, வட அரபிக்கடல் பகுதியில் போர்க்கப்பல்களை இந்தியா குவித்திருக்கிறது. பாகிஸ்தானும் தன் பங்கிற்கு, எல்லையையொட்டி தனது விமானப்படைத் தளங்களில், F-16 போர்விமானங்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், கடுமையான பதில் தாக்குதல் நடத்தி, விரட்டியடிப்பதற்கு ஏதுவாக, புதிய வெடிபொருட்களை உடனடியாக வழங்குமாறு, மத்திய அரசிடம் இந்திய விமானப்படை கோரியிருப்பதாக, தகவல் வெளியாகியிருக்கிறது.