×

ஊழல் செய்பவர்களுடன் பிரதமர் மோடி கூட்டணி வைத்துள்ளது வெட்கக்கேடானது : மு.க.ஸ்டாலின்

திருவாரூர் : ஊழல் செய்பவர்களுடன் பிரதமர் மோடி கூட்டணி வைத்துள்ளது வெட்கக்கேடானது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருவாரூரில் நடைபெற்ற தேர்தல் பிராச்சார கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், குட்கா ஊழலை சிபிஐ விசாரிக்கும் நிலையில், அதிமுகவோடு பாஜக கூட்டணி வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். திமுகவின் தலைநகரம் திருவாரூர் என கூறிய ஸ்டாலின், 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திருவாரூரில் வெற்றி பெற்றவர் கலைஞர் என்று கூறினார். வரும் தேர்தலுடன் மத்திய பாஜக ஆட்சியுடன், தமிழக அதிமுக ஆட்சியும் முடிவுக்கு வரும் என அவர் கூறியுள்ளார். மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கும் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும், 18 தொகுதி தேர்தல் முடிவு வரும்போது எடப்பாடி ஆட்சி அகற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொள்கை அடிப்படையில் திமுக கூட்டணி அமைந்துள்ளதாகவும், கம்யூனிஸ்ட்டுகளுடன் 2 ஆண்டுகள் அல்ல, இனி எப்போதும் சேர்ந்தே இருப்போம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். ஒவ்வொருவர் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என மோடி உறுதியளித்திருந்தார், கடந்த மக்களவை தேர்தலில் அளித்த வாக்குறுதியை மோடி நிறைவேற்றினாரா, வெறும் 15 ரூபாயாவது போட்டாரா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நரேந்திர மோடி இரும்பு மனிதர் அல்ல, நரேந்திர மோடி கல் பிரதமர் என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றி, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பியது என்ன ஆனது என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதனை தொடர்ந்து மக்களை ஏமாற்ற தான் பாஜக-அதிமுக கூட்டணி வைத்துள்ளது என்றும், திமுக ஆட்சியில் ரூ.7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,MK Stalin , PM Modi, AIADMK, MK Stalin, Lok Sabha election, election campaign
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...