திருவாரூர்: 2016 சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் திருவாரூரில் இருந்து வெற்றி பெற்றவர் கலைஞர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பிராச்சார கூட்டத்தில் பேசினார். மேலும் திமுகவின் தலைநகரம் திருவாரூர் எனவும் ஸ்டாலின் கூறினார். மத்தியிலும், மாநிலத்திலும் நடக்கும் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் கூறினார். மேலும் எடப்பாடி அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார். எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை என்பது வேடிக்கை என்றும் பேசினார். 18 தொகுதி தேர்தல் முடிவு வரும் போது எடப்பாடி அரசு அகற்றப்படும் எனவும் கூறினார். கொள்கை அடிப்படையில் அமைந்தது தான் திமுக கூட்டணி என்று உரையாற்றினார்.