×

சிவகிரி அருகே வீடுகள் மீது விழும் கற்கள் : கிராம மக்கள் அதிர்ச்சி

சிவகிரி:  ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பேயாங்காட்டு வலசு கிராமத்தில் உள்ள வீடுகள் மீது இரவு நேரங்களில் கற்கள் விழுவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே பேயாங்காட்டு வலசு கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் வசித்து வரும் தங்கமுத்து (55), பேபி (50), பாலசுப்பிரமணி (70), பிரகாஷ் (50), வள்ளியம்மை (60), மீனாட்சி (80) உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் வீடுகள் மீது நேற்று முன்தினம் இரவு 7 மணியிலிருந்து தொடர்ந்து கற்கள் விழுந்து வருகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள், வீடுகளின் மீது யாரோ மர்மநபர்கள் கற்களை வீசுவதாக நினைத்து இரவு முழுவதும் மர்ம நபர்களை தேடி வந்தனர். ஆனால் யாரும் சிக்கவில்லை. இந்நிலையில், நேற்று பகலிலும் வீடுகள் மீது தொடர்ந்து கற்கள் விழுந்து வருவதால் அப்பகுதியில் மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.ஆனால், தற்போது தேர்தல் பணிக்கு போலீசார் சென்றுள்ளதால், விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் மீது கல் விழும் சம்பவத்தால் பேயாங்காட்டுவலசு கிராம மக்கள் தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : houses ,Sivagiri , Sivagiri, houses, stones, villagers
× RELATED 8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின்...