×

சென்னையில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு : அதிமுக தலைமை அலுவலகம் அருகே தொடங்கியது

சென்னை : நாடாளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னை வந்துள்ள துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டங்களாக வருகிற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னை மாநகர காவல்துறையில் உள்ள 4 மண்டலங்களுக்கும் தலா 1 கம்பெனி வீதம் துணை ராணுவத்தினர் ஆயுதங்களுடன் சென்னை வந்துள்ளனர்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 806வது கம்பெனி பொறுப்பாளர் ஆய்வாளர் வினு மற்றும் பொறுப்பாய்வாளர் நாகூர் மீரா ஆகியோர்களின் தலைமையில் சுமார் 60 மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் கொடி அணிவகுப்பில் ஈடுபட்டனர். துப்பாக்கி ஏந்திய படை வீரர்கள் ராயப்பேட்டை காவல் நிலைய சரகத்தில் உள்ள அவ்வை சண்முகம் சாலையில் இருந்து அணிவகுப்பை தொடங்கினர்.
இதனிடையே லாயிட்ஸ் ரோடு,மிர்சாஹிப் மார்க்கெட், கௌடிய மடம் சாலை வழியாக மீண்டும் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அருகே கொடி அணிவகுப்பு முடிவடைகிறது.

தேர்தல் பணிக்காக வந்துள்ள துணை ராணுவத்தினர் காவல் துறையினருடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துணை ராணுவத்தினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.  பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parade ,Chennai ,AIADMK ,headquarters , Election, security, paramilitary, flag parade, Lok Sabha
× RELATED போலீசார் கொடி அணிவகுப்பு