தாகா: வங்கசேதத்தில் படகில் சென்ற அவாமி லீக் கட்சி தலைவரை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள ரங்கமதி மாவட்டத்தின் அலிகோங்க் பகுதியில் அந்த கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவர் சுரேஷ் கந்தி தான்சாங்கியா என்பவர் தனது குடும்பதினருடன் பிலாச்சேரி பகுதிக்கு படகில் சென்று கொண்டிருந்தார். நேற்று காலை 9.30 மணியளவில் அவரது படகை திடீரென வழிமறித்த மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால், சுரேஷ் கந்தி தான்சாங்கியாவை அவரது குடும்பத்தினர் கண் முன்னே சுட்டுக்கொலை செய்தனர்.