போலீஸ் ஸ்டேஷனில் ஓட்டல் பாக்கியை செலுத்திய நடிகை

பெங்களூரு,: தமிழ் மற்றும் கன்னடத்தில் பிரபல நடிகை பூஜா காந்தி.  இவர் பெங்களூரு ஹைகிரவுண்ட் அசோகா ஓட்டலில் 2016ல் தங்கியுள்ளார். அதே நாளில் பாஜ பிரமுகரான அனில் மென்சினகாய் என்பவரும் அந்த ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். ஓட்டல் வாடகை, சாப்பாட்டு செலவு ஆகியவற்றை இருவரும் சரிசமமாக பகிர்ந்து கொள்வதாக கூறியிருந்தனர். ஆனால், ஓட்டல் வாடகையில் 3.53 லட்சம் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஓட்டல் நிர்வாகம் பலமுறை கூறியும், இருவரும் பணம் கட்ட மறுத்ததால் போலீசார் புகார் அளித்தனர். இதையடுத்து, நடிகை பூஜா காந்தி, 3.83 லட்சத்தை காவல் நிலையத்தில் செலுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: