திருமலை: ஆந்திராவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையொட்டி நேற்று முன்தினம் முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இதற்கிடையே முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, மக்களவை தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் சித்தூர்- சிவபிரசாத் (தற்போதைய எம்பி), திருப்பதி- பனபாகலட்சுமி (முன்னள் மத்திய அமைச்சர்), ராஜம்பேட்டை- சத்தியபிரபா(தற்போதைய சித்தூர் எம்எல்ஏ), கடப்பா- ஆதிநாராயணரெட்டி, விஜயநகரம்- முன்னாள் மத்திய அமைச்சர் அசோக்கஜபதி ராஜூ உட்பட 25 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதேபோல் 36 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி