×

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்துக்கு எதிராக பெண் ஐபிஎஸ், வழக்கறிஞர் குழு அமைப்பு

சென்னை: பொள்ளாச்சியில் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் கொடூரத்துக்கு எதிராக ஓய்வுபெற்ற பெண் ஐபிஎஸ், வழக்கறிஞர்கள் சேர்ந்து குழு ஒன்றை அமைத்துள்ளனர். ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி தலைமையில் பாலியல் வன்முறைகளுக்கெதிரான முறையீட்டுக் குழு தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஐஏஎஸ், வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ளவர்கள் இணைந்துள்ளனர். 99943 68566 என்ற செல்போன் எண்ணும்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘இந்த எண்ணில் பாதிக்கப்பட்ட பெண்களோ,  உறவினர்களோ தொடர்பு கொண்டு பேசலாம். வாட்ஸ் அப்பிலும் தகவல் தெரிவிக்கலாம்.  பெயர், மற்றும் அனைத்து விவரங்களும் ரகசியமாக பாதுகாக்கப்படும்’ என்று  திலகவதி தெரிவித்தார். இந்த குழுவில் வழக்கறிஞர் ஆதிலட்சுமி லோகமூர்த்தி,  சுதா ராமலிங்கம், அங்கயற்கண்ணி ஆகியோரும் பொறுப்பில் உள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,lawyer ,IPS ,group , Pollachi , female IPS ,lawyer group , sex crimes
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!