சென்னை: காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ெபண் எஸ்ஐ ஒருவரின் மொபட்டை உடன் பணியாற்றும் உதவி ஆய்வாளர் ஒருவர் திருடிய சம்பவம் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவல்லிக்கேணியில் மாதா பெயர் கொண்ட பெண் எஸ்ஐ ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர், கடந்த பிப்ரவரி 25ம் தேதி பணி முடிந்து வீட்டிற்கு செல்ல காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த தனது மொபட்டை எடுக்க வந்தபோது, அது மாயமாகி இருந்தது. இதுகுறித்து இன்ஸ்ெபக்டரிடம் பெண் எஸ்ஐ புகார் அளித்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் அனைத்து போலீசாரையும் நேரில் அழைத்து விசாரித்தார். ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் காவல்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பார்த்தார்.