குர்கான்: தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் திறமை வாய்ந்ததாக நாட்டின் தலைமை உள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக கருதப்படுபவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல். இவர்தான் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத பயிற்சி முகாமை விமானங்கள் மூலம் தாக்கி அழிக்க பிரதமருக்கு ஆலோசனை தெரிவித்தவர் என கருதப்படுகிறது. இந்த நிலையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்)யின் 80வது நிறுவன தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அரியானா மாநிலம் குர்கானில் நேற்று நடைபெற்ற விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது: காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த பிப்.14ல் நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை மறக்க முடியாது.