கன்னியாகுமரியில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கல்லூரி நிர்வாகி மீது புகார்

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளத்தில் செயல்படும் தனியார் பாராமெடிக்கல் கல்லூரி நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு அளிக்கப்பட்டுள்ளது. பாராமெடிக்கல் கல்லூரி நிர்வாகி ரவி, கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் ரவியை காவல் நிலையம் அழைத்துச் சென்று பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: