×

சென்னை குடும்பநல நீதிமன்றத்திற்குள் மனைவியை கணவன் கத்தியால் குத்தியதால் பரபரப்பு...!

சென்னை: மனைவி வரலட்சுமியை கணவர் சரவணன் நீதிபதி முன் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் முதன்மை குடும்பநல நீதிமன்றம் உள்பட 8 குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் நாள்தோறும், கூட்டம் அதிகமாகவே காணப்படும். முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த சரவணன்-வரலட்சுமி தம்பதியின் விவகாரத்து வழக்கு வெகு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதி கலைவாணன் முன்பு ஆஜராகியிருந்த சரவணன்-வரலட்சுமிக்கு இடையில் கடும் வாதம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, நீதிமன்றத்தின் அறையை விட்டு இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது, கடும் கோபத்தில் இருந்த கணவர் சரவணன், தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் மனைவி வரலட்சுமியை குத்தியுள்ளார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்த வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர், வரலட்சுமியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மனைவியை கத்தியால் குத்தியை சரவணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள உயர்நீதிமன்ற போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், அவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. நீதிமன்றத்திற்கு அதிகப்படியானோர் வருவதால் போலீசாரும் தக்க பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால், மிகுந்த பாதுகாப்புக்கு இடையிலும் சரவணனன், கத்தியை கொண்டு வந்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Husbands ,Family Family Court , Chennai, family court, wife, husband knife
× RELATED ‘மருதமலை’ படத்தில் வரும் வடிவேல்...