சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அரசு அதிகாரிகளான கணவன், மனைவி இருவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர்கள் அறிவுடை நம்பி. இவரது மனைவி சத்தியவாணி. அறிவுடைநம்பி சென்னை டி.எம்.எஸ்சில் துணை மருத்து கட்டுப்பாட்டு அதிகாரியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி தலைமை செயலகத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், தம்பதி இருவரும் பணியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் கடந்த 2007ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வருமானத்துக்கு அதிகமாக 90 சதவீத சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தது.