மதுரை: சென்னையை சேர்ந்த திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை கள்ளழகர் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க கோரி, 2018, நவ. 16ல் அதிகாரிகளுக்கு மனு அனுப்பிய நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எனது மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணிந்தர் ரெட்டி ஆஜராகி, கோயில் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்பது குறித்து விரைந்து நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்றும் அறிக்கை தாக்கல் செய்தார்.