ஊட்டி: ெகாடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயான், மனோஜ் ஆகியோரை கோவை சிறையில் சித்ரவதை செய்வதாகவும், அவர்களை சந்தித்து பேச அனுமதி மறுப்பதாகவும் ஊட்டி கோர்ட்டில் வக்கீல் பரபரப்பு புகார் தெரிவித்தார். இதையடுத்து அவர்களிடம் பேச வக்கீலுக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். நீலகிரியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதி காவலாளி கொலை மற்றும் கொள்ளை நடந்தது. இதில், ேகரள மாநிலத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. கோவை சிறையில் இருந்த சயான், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி, மனோஜ்சாமி, திபு ஆகியோரை போலீசார் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். ஜம்சீர்அலி, ஜித்தின்ஜாய், மனோஜ், உதயகுமார், சதீசன் ஆகிய 5 பேர் ஜாமீனில் உள்ள நிலையில் அவர்களும் நேற்று ஆஜராகினர். அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆனந்தன், சயான், மனோஜ் உள்ளிட்டவர்களிடம் பேசுவதற்கு போலீசார் மற்றும் அரசு தரப்பு வக்கீல் அனுமதிப்பதில்லை.