பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது

பெரம்பூர்: சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மாநகர பேருந்து (தடம் எண் 44 கிராஸ்) நேற்று இரவு தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. சென்றது. அங்கிருந்து தண்டையார்பேட்டை டிப்போவுக்கு வஉசி நகர் வழியாக ஏஏ திட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் கல்வீசி பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்தார்.

 இதுகுறித்து  டிரைவர் தென்காசியை சேர்ந்த சீனிவாசலு (43) புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.  விசாரணையில், பஸ் கண்ணாடியை உடைத்தது அதே பகுதியை சேர்ந்த குப்பன் (23) என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: