பெரம்பூர்: சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து மாநகர பேருந்து (தடம் எண் 44 கிராஸ்) நேற்று இரவு தண்டையார்பேட்டை ஐ.ஓ.சி. சென்றது. அங்கிருந்து தண்டையார்பேட்டை டிப்போவுக்கு வஉசி நகர் வழியாக ஏஏ திட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் கல்வீசி பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்தார்.