அதிக ஓட்டு வாங்குனா ரூ.1லட்சம் பரிசு தாரேன்.... துரைமுருகன் கலகலப்பு

திருத்தணி திமுக சட்டமன்ற தொகுதி செயல்வீரர் கூட்டம் நேற்று அகூர் நத்தம் கிராமத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டு  பேசியதாவது: திமுக தலைவர் ஸ்டாலின்,  ‘’நமது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஜெகத்ரட்சகனை ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்து கொள்கிறேன். நீங்கள் என்னுடன் இருந்து கொள்ளுங்கள்’’ என்று கூறி விட்டார்.  இதற்கு ஜெகத்ரட்சகனும் சரி என்று கூறிவிட்டார். ஆனால் இரண்டு தினங்கள் கழித்து ஜெகத்ரட்சகன் என் வீட்டிற்கு கண்ணீரோடு வந்தார். நான் என்னவோ,  ஏதோ என்று பதறிப் போய் விட்டேன். அப்போது ஜெகத்ரட்கன் கூறினார், ‘’அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்சியினரும், பொதுமக்களும் என் வீட்டு வாசலில்  ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ளனர். நீங்கள் வேட்பாளராக வராவிட்டால் உங்கள் வீட்டு முன்பு தீக்குளிப்போம் என்று கண்ணீருடன் கூறுகின்றனர். இதனால் என்ன செய்வது என்று தெரியவில்லை’’ என்று கூறினார். வேறு வழியில்லாமல் மீண்டும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.

 இதற்கு காரணம் என்னவென்றால், அவரிடம் உதவி என்று சென்றால் அது கல்வியாகட்டும், கோயில் திருப்பணி ஆகட்டும், திருமணம் ஆகட்டும் எந்த உதவியாக இருந்தாலும் அவர்களுக்கு அந்த உதவி செய்வதில் அவர் வள்ளல் குணம் படைத்தவர். நானும் இந்த நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டவன் தான்.  நான் வெற்றி பெற்ற காட்பாடி சட்டமன்ற தொகுதியும் இந்த நாடாளுமன்ற தொகுதிக்குள் தான் வருகிறது. என்னுடைய சட்டமன்ற தொகுதியை விட அதிகமான வாக்குகளைப் பெற்றுத் தருகின்ற சட்டமன்ற தொகுதிக்கு அதே தொகுதியில் கூட்டம் போட்டு அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்குவேன். யார் இந்த சவாலை ஏற்றுக்கொள்கிறீர்கள். (அப்போது கூட்டத்தில் இருந்த கட்சியினர், பொதுமக்கள் இந்த சவாலை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். சவாலுக்கு தாயார் என கூறினர்.) நான் உங்களிடம் தங்கத்தை ஒப்படைக்கிறேன். நீங்கள் அதை அணிகலன்களாக மாற்றி எம்பியாக தாருங்கள். அவர் ராஜ முத்திரையுடன் இங்கு வந்து உங்களுக்கு சேவை செய்வார். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: