திருமலை: ஆந்திர மாநிலம் திருப்பதி புறக்காவல் மாவட்ட எஸ்பி அன்பு ராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:திருப்பதி புறக்காவல் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மூன்று கம்பெனிகள் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நேற்று கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூடுதலாக துணை ராணுவத்தினர் வர உள்ளனர். திருப்பதி தொகுதியில் 6 வாக்குச்சாவடிகள் பதற்றமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது.திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் திருடப்பட்ட மூன்று தங்க கிரீடங்களை கண்டுபிடிப்பதற்காக டிஎஸ்பி ரவி பிரகாஷ் தலைமையில் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். இதற்காக மகாராஷ்டிரா, தெலங்கானா, பீகார் உட்பட மாநிலங்களில் தொடர்ந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.