கர்நாடகாவில் சுயேச்சையாக நடிகை சுமலதா போட்டி: நாளை மனு தாக்கல் செய்கிறார்

பெங்களூரு: கர்நாடகாவின் மண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக அம்பரீஷின் மனைவி சுமலதா அறிவித்தார். பெங்களூருவில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  மறைந்த நடிகர் அம்பரீசுக்கு எப்போதும் குடும்பம் என்பதை விட மண்டியா மக்கள் தான் முக்கியம். 45 ஆண்டுகள் சினிமா துறையிலும், அரசியலில்  25 ஆண்டுகளும் சேவை செய்துள்ளார். இன்று அவர் இல்லை என்பது மண்டியா மக்களுக்கும், எங்களுக்கும் பெருத்த வேதனையை அளிக்கிறது.

மண்டியா மக்களுக்கு அம்பரீஷ் செய்து வந்த சேவையை நாங்கள் தொடரவேண்டும் என்பதே எங்களின் குறிக்ேகாள். மண்டியா மக்கள் என்னிடம் வந்து கட்டாயப்படுத்தியதால் தான் நான் அத்தொகுதி தேர்தலில் சுயேச்சையாக  போட்டியிட விரும்புகிறேன்.

 நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உட்பட பலர் எனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என நினைக்கிறேன். நாளை மனு தாக்கல் செய்கிறேன் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: