பொள்ளாச்சி பாலியல் விவகாரம் முதல்வர் வீட்டை முற்றுகையிட சென்றவர்கள் கைது

சேலம்: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகளை முறையாக கைது செய்து நடவடிக்கை எடுக்காத அரசு பதவி விலக வலியுறுத்தியும் மக்கள் அரசு கட்சியினர், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று, அக்கட்சியினர் சூரமங்கலம் தலைமை தபால் நிலையம் முன்பு திரண்டு கோஷமிட்டனர்.  

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்த வழக்கை சிபிஐ முறையாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழக அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள், முதல்வர் வீட்டை முற்றுகையிட சென்றனர். அப்போது 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: