புதுடெல்லி: பங்குச்சந்தைகள் 6வது நாளாக நேற்றும் ஏற்றம் மும்பை பங்குச்சந்தை 70 புள்ளிகள் அதிகரித்தது. தேர்தல் நெருங்கும் நிலையில் பங்குச்சந்தைகளில் திடீர் ஏற்றம் காணப்பட்டு வருகிறது. தொடர்ந்து 7வது நாளாக நேற்றும் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வை சந்தித்தது. நேற்று காலை வர்த்தகம் துவங்கியதும், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 38,132.96 புள்ளிகளாக ஏற்றம் அடைந்திருந்தது. ஆனால் சற்று நேரத்தில் திடீர் சரிவை சந்தித்து, 37,952.10 புள்ளிகளாக சரிந்தது. வர்த்தக இடையில் 38,369.59 புள்ளிள் என்ற உச்சத்தை அடைந்தது. வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 70.75 புள்ளிகள் உயர்ந்து 38,095.07 புள்ளிகளாக இருந்தது.