திமுக, அதிமுக வேட்பாளர்கள் அண்ணன், தம்பியால் ரணகளமான ஆண்டிபட்டி

ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் மகாராஜன், அதிமுக வேட்பாளராக தம்பி லோகிராஜன் போட்டியிடுகின்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள சாத்தூர், ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, பெரியகுளம் உட்பட 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப். 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று  முன்தினம் மாலை வெளியானது.இதில் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக மகாராஜன் (64) அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக சார்பில் லோகிராஜன் (60) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர்  மகாராஜனின் உடன் பிறந்த தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஜன் ஆண்டிபட்டியிலும், லோகிராஜன் கண்டமனூர் விலக்கிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.மகாராஜன் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். லோகிராஜன் 9ம் வகுப்பு முடித்துள்ளார். இருவரும் முழு நேர அரசியல்வாதிகளாக உள்ளனர். பிரதான கட்சிகளான திமுக, அதிமுகவின் வேட்பாளர்களாக உடன்பிறந்த சகோதரர்கள்  போட்டியிடுவது, ஆண்டிபட்டி தொகுதியில் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: