தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (19ம் தேதி) தொடங்குகிறது. இந்த தேர்தலை பொறுத்தவரை இன்று தொடங்கும் வேட்புமனு தாக்கல் 8வது நாளான அடுத்த செவ்வாய்க்கிழமை முடிகிறது. 23ம் தேதி நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகள் விடுமுறை. அன்று வேட்புமனு தாக்கல் கிடையாது. அதற்கு மறுநாள் (24ம் தேதி) ஞாயிற்றுக்கிழமையும் வேட்புமனு தாக்கல் கிடையாது. எனவே 6 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.