வீட்டு வேலைக்கு ஆட்கள் இருப்பதாக கூறி துணிகரம் தொழிலதிபரை பெண்களுடன் ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி ரூ.3 லட்சம் பறிப்பு

நாட்றம்பள்ளி: தொழிலதிபரை தாக்கி அரை நிர்வாணமாக பெண்களுடன் போட்டோ எடுத்து ரூ.3 லட்சம் பறித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், ஆம்பூர் நூருல்லாபேட்டை கே.எம். தெருவை சேர்ந்தவர் அப்துல்ரப்ஆரிப். ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவரது தாய் கடந்த ஓராண்டாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். இவரை கவனித்து கொள்ள செவிலியர் வேண்டும் என்று தனது நண்பர்களிடம் கூறினார்.இதையடுத்து, சில நாட்களுக்கு முன் வாணியம்பாடி அடுத்த கல்மண்டபம் பகுதியை சேர்ந்த ஆபிதா என்பவர், அப்துல்ரப்ஆரிபின் மொபைலுக்கு தொடர்பு கொண்டு வாணியம்பாடி பகுதியில் செவிலியர் இருப்பதாகவும், அவரிடம் பேசி உங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள் என கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஆரிப் தொழில் சம்மந்தமாக பெங்களூரு சென்றுவிட்டு ரயிலில் ஆம்பூர் வந்தார். அப்போது, ஆபிதா மீண்டும் போனில் தொடர்பு கொண்டு, நீங்கள் கேட்டபடி செவிலியர் உள்ளார். வாணியம்பாடி வாருங்கள் என்று கூறியுள்ளார்.அதன்படி அப்துல்ரப்ஆரிப், வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இறங்கி ஆட்டோ மூலம் அந்த பெண் கொடுத்த வீட்டின் முகவரிக்கு சென்றார். அங்கு தயாராக இருந்த ஆபிதா மற்றும் சில பெண்கள் அவரை வீட்டின் உள்ளே அழைத்து சென்றனர். அங்கிருந்த சில மர்ம நபர்கள், அப்துல்ரப் ஆரிப்பை திடீரென சரமாரி தாக்கி அரை நிர்வாணமாக பெண்களுடன் போட்டோ எடுத்தனர். இதையடுத்து, கத்தியை காட்டி மிரட்டி ரூ.10 லட்சம் கேட்டு அவரது ஏடிஎம் கார்ட், கிரிடிட் கார்ட், ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டார்களாம்.

மேலும் வாணியம்பாடி சிஎல் ரோட்டில் உள்ள நகை கடையில் ரூ.2 லட்சத்திற்கு நகைகளை ஏடிஎம் கார்டு மூலம் வாங்கிய அவர்கள், ஏடிஎம்மில் ரூ.1 லட்சம் எடுத்துக்கொண்டார்களாம். மேலம் இதுபற்றி வெளியில் சொல்லக்கூடாது. அவ்வாறுதெரிவித்தால் ஆபாச படங்களை வெளியிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதையடுத்து அன்றிரவு ஒரு சிறுவனுடன் ரயில் நிலையத்திற்கு அனுப்பினர். மசூதி அருகே வந்தபோது அப்துல்ரப்ஆரிப் திடீரென கூச்சலிட்டார். இதைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு சிறுவனை பிடித்து வாணியம்பாடி டவுன் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து அப்துல்ரப் ஆரிப் வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் அளித்தார். டிஎஸ்பி முரளி, டவுன் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிந்து சிறுவனிடம் விசாரித்தனர். மேலும் அவன் கொடுத்த தகவலின்பேரில் மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமகா தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: