சிவகங்கை: லாடனேந்தல் கனரா வங்கியில் நகை மதிப்பீட்டில் ரூ.36 லட்சம் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. நகை மதிப்பீட்டாளர் செந்தில்குமார், கதிரேசன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வங்கி மேலாளர் பவுன்ராஜ் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தனர்.