கொல்லங்கோடு: கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பரணேறு திருவிழாவில் 1000 கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கேரள-தமிழக எல்லை பகுதியான கொல்லங்கோடு பகுதியில் பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் 24 ஆண்டுக்கு பிறகு பரணேறு திருவிழா இன்று காலை நடைபெற்றது. காளிதேவி தாரிக அசுரனை அளிக்க நடந்த போரில் வெற்றி பெற்றதன் நினைவாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.