மகாராஷ்ட்ரா: மகாராஷ்ட்ரா மாநிலம் புனே புறநகர் பகுதியான பிம்ரியில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தாய் கொள்ளையர்கள் தூக்கிச்சென்று 30 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர் ஏடிஎம் இயந்திரம் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார், இதனை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் நள்ளிரவு நேரத்தில் கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தின் மின் இணைப்புகளை துண்டித்துவிட்டு, ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து எடுத்து தூக்கி சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். கண்காணிப்பு கேமராக்களின் ஒயர்களையும் கொள்ளையர்கள் துண்டித்து விட்டதால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.