குமரி: கன்னியாகுமரி அருகே வாங்கிய கடனை திருப்பித் தராததால் 4 வயது சிறுவன் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சகாய சிந்துஜா என்பவரின் குழந்தையை அந்தோணிசாமி என்பவர் கடத்தி சென்று கொன்று விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய பின்ராஜ். இவரது மனைவி சகாய சிந்துஜா. இவர் ஆரோக்கியபுரத்தைச சேர்ந்த அந்தோணிசாமி என்பவரிடம் ரூ.58 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பி செலுத்துவதில், சிந்துஜாவுக்கும், அந்தோணிசாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தோணிசாமி, சிந்துஜாவின் மகன் ரெய்னாவை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.