ஹூஸ்டன்: புல்வாமா தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் இந்தியர்கள் போராட்டம் நடத்தினர்.அமெரிக்காவில் ஹூஸ்டன் வாழ் சர்வதேச இந்திய நண்பர்கள் சமூகம், ஹூஸ்டன் வாழ் புலம்பெயர்ந்த சர்வதேச காஷ்மீரி பண்டிட் அமைப்பு இணைந்து ஹூஸ்டன் நகரில் நேற்று போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில், புல்வாமா தாக்குதல் இந்திய இறையாண்மையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இப்போராட்டத்தில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர், `பாகிஸ்தான் தீவிரவாத நாடு, தீவிரவாத கொள்கையை பாகிஸ்தான் கைவிட வேண்டும், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என கோஷமிட்டனர்.