2 வாரங்களிலேயே இந்திய சந்தையில் ரூ.20,400 கோடி முதலீடு

புதுடெல்லி: இந்த மாதம் முதல் 2 வாரங்களிலேயே இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.20,400 கோடி முதலீடு செய்துள்ளனர். இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நிகர முதலீடாக ரூ.11,182 கோடி மேற்கொண்டிரந்தனர். இது பங்கு, மூலதன சந்தைகள் மற்றும் கடன் பத்திர முதலீடுகளும் அடங்கும்.

 இதுபோல் இந்த மாதத்தில் கடந்த 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் ரூ.17,919 கோடி முதலீடு செய்திருந்தனர். கடன் சந்தையில் மேற்கொண்ட நிகர முதலீடு ரூ.2,499 கோடி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: