புதுடெல்லி: இந்த மாதம் முதல் 2 வாரங்களிலேயே இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.20,400 கோடி முதலீடு செய்துள்ளனர். இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த பிப்ரவரி மாதம் நிகர முதலீடாக ரூ.11,182 கோடி மேற்கொண்டிரந்தனர். இது பங்கு, மூலதன சந்தைகள் மற்றும் கடன் பத்திர முதலீடுகளும் அடங்கும்.