புதுடெல்லி: எல்ஐசி நிறுவனத்தின் தலைவராக எம்.ஆர்.குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். இதுபோல், புதிய நிர்வாக இயக்குநர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட எம்.ஆர்.குமார், டெல்லி, ஹரியானா, இமாசல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களையும் சண்டிகார் யூனியன் பிரதேசத்தையும் உள்ளடக்கிய எல்ஐசியின் வடக்கு மண்டலத்துக்கு பொறுப்பு வகித்தவர். கடந்த 2017 ஏப்ரல் மாதம் முதல் இந்த பதவியில் இருந்தார். இதற்கு முன்பு இந்த நிறுவனத்தில் பென்ஷன் மற்றும் குழு திட்டங்களின் செயல் இயக்குநர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். வடக்கு மண்டலம் மட்டுமின்றி, சென்னையில் தென் மண்டலம் மற்றும் கான்பூரில் வட மத்திய மண்டலங்களின் தலைமை பொறுப்பை வகித்தவர். அகமதாபாத், எர்ணாகுளம் கோட்டங்களுக்கும் தலைமை பொறுப்பு வகித்தவர்.