எத்தியோப்பியா விமான விபத்து இறந்தவர்களை அடையாளம் காணும் பணி தீவிரம்

எத்தியோப்பியா: எத்தியோப்பியா விமான விபத்தில் இறந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த சுமார் 6 மாத காலம் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அன்மையில் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானத்தில் பயணித்த சுமார் 150 பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இறந்தவர்களை அடையாளம் காணும் பணி துரிதமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து தககவல் தெரிவித்துள்ள விமான நிர்வாகம் விபத்தில் இறந்தவர்களை இன்னும் 5 அல்லது 6 மாத காலத்திற்குள் முறைப்படி அடையாளம் கண்டு அறிவிக்க உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இறந்தவர்களின் டி.என்.ஏ உள்ளிட்டவை பரிசோதனைகள் செய்யப்பட்டு உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: