இங்கிலாந்து: இங்கிலாந்தின் வடக்குப் பகுதிகளில் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் வடக்கு இங்கிலாந்து தெற்கு ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக நார்த்வேல்ஸ் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே மணிக்கு 104 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் போற்றி துறைமுகத்தில் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் காற்றின் வேகத்தை தொடர்ந்து கனமழையும் கொட்டி தீர்த்ததுள்ளது. இதன்காரணமாக வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து பகுதிகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி