அதிமுக கூட்டணியில் விருதுநகர் தொகுதி கிடைக்காத விரக்தியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா குலதெய்வத்தை வழிபடாமல் சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது. தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த். இவருக்கு மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே காங்கேயநத்தத்தில் உள்ள வீரசின்னம்மாள் சாமி குலதெய்வமாக உள்ளது. மதுரை வரும்போது எல்லாம் விஜயகாந்த், மனைவி பிரேமலதாவுடன் குலதெய்வ கோயிலில் தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் மதுரை வந்த பிரேமலதா கோயிலில் தரிசன ஏற்பாடுகளை செய்யுமாறு கட்சியினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் கட்சி நிர்வாகிகள் மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களுடன் காங்கேயநத்தம் கோயிலில் காலை முதலே காத்திருந்தனர். ஆனால் அவர் மாலை 4 மணிக்கு வருவதாக பின்னர் தகவல் வந்தது. அப்போதும் வரவில்லை.