பெரு நாட்டின் ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவு

பெரு: தென் அமெரிக்க நாடுகளான பெரு - ஈக்வடார் எல்லை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மன்டல்வோ பகுதியில் ஏற்பட்ட இந்த நிலடுக்கம் ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவானது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது.

அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் புகுந்தனர். சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து மேலும் சில இடங்களில் நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் மூலம் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: