சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக ஆவடி- அரக்கோணம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மூர்மார்கெட்டில் இருந்து திருத்தணி வரை இயக்கப்படும் மின்சார ரயில் மூர்மார்க்கெட்டில் இருந்து ஆவடி வரை ரத்து செய்யப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு ஆவடி முதல் திருத்தணி வரை இயக்கப்படுகிறது. அரக்கோணம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருவள்ளூர் முதல் மூர்மார்க்கெட் வரையும், பட்டாபிராம் முதல் மூர்மார்க்கெட் வரையும், திருத்தணி முதல் மூர்மார்க்கெட் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு ஆவடி முதல் மூர்மார்க்கெட் வரை இயக்கப்படுகிறது.