×

பாம்பன் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம்: பாம்பன் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற் படை சிறைபிடித்தது.ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் இருந்து நேற்று முன்தினம் காலை 100 விசைப்படகுகளில் மீனவர்கள் சென்றனர். நள்ளிரவில் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், பாம்பனை சேர்ந்த கொலம்பஸ் (38), அருள் (32), ஜெயகாந்தன் (35), முருகன் (40), அடைக்கலம் (55) ஆகிய 5 பேரை விசைப்படகுடன் சிறை பிடித்து, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். அங்கு கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். படகில் இருந்த ஜிபிஎஸ் உள்ளிட்ட கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.பின்னர் 5 பேரையும் நேற்று காலை தலைமன்னார் மாவட்ட கடல்தொழில் மற்றும் நீரியியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மாலையில், தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை, மாரச் 8 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fishermen ,fisherman ,Pamban , Pamban fishermen, Sri Lankan pirates, captivity
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...