சென்னை: எழும்பூர் ரயில் நிலைய டிக்ெகட் கவுன்டர் அருகே கோட்பாரற்று கிடந்த மர்ம பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து பெட்டியை அப்புறப்படுத்தினர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் 4வது நடைமேடை அருகே உள்ள டிக்கெட் கவுன்டர் அருகே கேட்பாரற்று ஒரு பெட்டி கிடந்தது. சிறிது நேரத்தில் அந்த பெட்டிக்குள் இருந்து அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் இதுபற்றி ரயில்வே போலீஸ் உதவி மையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், எழும்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த பெட்டியை கைப்பற்றி பயணிகள் உடமைகள் ஸ்கேன் செய்யும் இயந்திரத்தில் வைத்து சோதனை செய்தனர்.