நீதிபதி, நீதிமன்றம் குறித்து அவதூறு முதியவர் கைது

சென்னை: வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று காலை வந்த 58 வயது மதிக்கத்தக்க நபர்,  பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரிடம் சில துண்டு பிரசுரங்கள் கொடுத்தார். அதில், நீதிமன்றங்கள் குறித்தும், நீதிபதிகள் குறித்தும் ஆபாசமான வார்த்தைகள் இருந்தது.  விசாரணையில் அவர் கூடுவாஞ்சேரி, மாடம்பாக்கம் ஸ்ரீராம் நகரை சேர்ந்த வடிவேல் (58) என்றும், இவர் கடந்த 7.11.1989ம் ஆண்டு பல்லவன் போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்ததும், கடந்த 2010ம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

வாழக்கை விரைந்து முடிக்காததால் விரக்கி அடைந்த அவர், நீதிபதிகள் குறித்து ஆபாசமாக எழுதி அச்சகத்தில் துண்டு பிரசுரங்களாக அடித்து கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வடிவேல் மீது 294(பி), 353, மற்றும் 7(1),(ஏ), சிஎல்ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 20 துண்டு பிரசுரங்களையும் போலீசார் பறிமுதல் ெசய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: