புதுடெல்லி: குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தின் கேவடியா பகுதியில் 182 மீட்டர் உயரத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ‘ஒற்றுமையின் சிலை’ எனப்படும் இந்த சிலையை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதை பார்வையிட வசதியாக சண்டிகரில் இருந்து வரும் மார்ச் 4ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது இந்த ரயில், பல்வேறு புனித தலங்களுக்கும் செல்லும்.