* உலக கோப்பை போட்டித் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் மோதுவதைத் தவிர்ப்பதால் இந்திய அணி 2 புள்ளிகளை இழக்க நேரிடுவதை நான் வெறுக்கிறேன். அது பாகிஸ்தான் அணிக்கே சாதகமாக இருக்கும். எனவே இந்த போட்டியை கைவிடுவதை விட, எதிர்த்து விளையாடி அவர்களை வீழ்த்துவதே சரி என்ற கவாஸ்கரின் கருத்தை நானும் ஆதரிக்கிறேன்’ என்று மாஸ்டர் பிளேஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
* டெல்லியில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் இனி சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கான அனுமதி ரத்து செய்யப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. மேலும், பாக். வீரர்கள் பங்கேற்க இருந்த ஆண்கள் 25 மீட்டர் ரேப்பிட் பயர் பிஸ்டல் பிரிவுக்கான ஒலிம்பிக் தகுதி அந்தஸ்தையும் திரும்பப் பெற்றுள்ளது.