செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தூசி கிராமத்தை சேர்ந்தவர் இனயத்துல்லா. இவர் தனது வீட்டில் ஒரு பூனையை வளர்த்து வருகிறார். வீட்டின் அருகே அவ்வப்போது பாம்புகள் வருமாம். இதனால் இவரது குடும்பத்தினர் அச்சத்தில் தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் இனயத்துல்லா வீட்டின் பின்வாசல் வழியாக ஒரு பாம்பு புகுந்துள்ளது. இதைக்கண்ட குடும்பத்தினர் அலறியடித்து ஓடினர். அப்போது வீட்டில் இருந்த பூனை பாம்பை கண்டு எகிறி குதித்து வெளியே வந்து தடுத்து நிறுத்தியது.