செய்யாறு அருகே பரபரப்பு பாம்பிடம் இருந்து எஜமானை காப்பாற்றிய பூனை

செய்யாறு : திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தூசி கிராமத்தை சேர்ந்தவர் இனயத்துல்லா. இவர் தனது வீட்டில் ஒரு பூனையை வளர்த்து வருகிறார். வீட்டின் அருகே அவ்வப்போது பாம்புகள் வருமாம். இதனால் இவரது குடும்பத்தினர் அச்சத்தில் தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் இனயத்துல்லா வீட்டின் பின்வாசல் வழியாக ஒரு பாம்பு புகுந்துள்ளது. இதைக்கண்ட குடும்பத்தினர் அலறியடித்து ஓடினர். அப்போது வீட்டில் இருந்த பூனை பாம்பை கண்டு எகிறி குதித்து வெளியே வந்து தடுத்து நிறுத்தியது.

ஆனால் பாம்பு பூனையிடம் இருந்து விலகி உள்ளே செல்ல முயற்சித்தது. ஆனால் பூனை அதனை விடாமல் சண்டையிட்டது. அப்போது பூனையின் கழுத்தில் பாம்பு சுற்றிக்கொண்டது. இதையடுத்து 45 நிமிடமாக போராடிய பூனை பாம்பை கடித்து சாகடித்தது. வீட்டிற்குள் புகுந்த பாம்பை உரிய நேரத்தில் கண்ட பூனை கடித்து சாகடித்து தனது எஜமான் குடும்பத்தினரை காப்பாற்றிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: