புதுவை : புதுச்சேரி ஆளுநருக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நமச்சிவாயம் தகவல் தெரிவித்துள்ளார். அரசு முன்வைத்த கோரிக்கைகளை ஆளுநர் கிரண்பேடி நிறைவேற்றாததால் மீண்டும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் புதுச்சேரியில் உள்ள கிராமங்கள் தோறும் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.