கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கொடூரமாக கொலை

கடலூர் : கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் பள்ளி ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். குறிஞ்சிப்பாடி சின்னக்கடை வீதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகளான ரம்யா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரை அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த ராஜசேகர் என்பவர் ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. ராஜசேகர் கடந்த 6 மாதங்களுக்கு முன் ரம்யாவீட்டிற்கு சென்று பெண் கேட்டதாகவும் ஆனால் ரம்யாவும் அவரது குடும்பத்தினரும் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சனைகளை அடுத்து ரம்யா மீது ராஜசேகர் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம்போல இன்று காலை பள்ளிக்குச் சென்ற போது, ரம்யாவை பள்ளி வளாகத்தில் மறைத்த ராஜசேகர் சரமாரியாக தாக்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் ரம்யாவின் கழுத்தை அறுத்துவிட்டு ராஜசேகர் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் சரிந்த ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்ட மாணவர்களும் சக ஆசிரியர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். பள்ளி வளாகத்தில் ஆசிரியை கொடூரமாக கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: