கடப்பா மாவட்ட வனப்பகுதியில் செம்மரம் கடத்த முயன்றவர் கைது: 10 லட்சம் மதிப்பு கட்டைகள், கார் பறிமுதல்

திருமலை: கடப்பா மாவட்ட வனப்பகுதியில் செம்மரம் கடத்த முயன்ற திருப்பத்தூரை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவின் கடப்பா மாவட்டம் லங்கமல வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு  போலீசார் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது டும்ப்பலகட்டு  என்ற பகுதியில் சென்றபோது அங்கு 10க்கும் மேற்பட்டோர் காரில் செம்மரக்கட்டைகளை கடத்த முயற்சி செய்து கொண்டு இருந்தது தெரிந்தது.

போலீசார் வருவதை பார்த்த அனைவரும் தப்பியோடினர். தொடர்ந்து போலீசார், அவர்களை விரட்டி சென்றதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தப்பிவிட்டனர். பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர், வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச்  சேர்ந்த வேலாயுதம் என தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து வேலாயுதத்தை கைது செய்தனர். மேலும், அங்கிருந்த 10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டை, ஒரு காரை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  தப்பியோடிய மற்றவர்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: