சென்னை: இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்க உதவித் தொகை பெற மார்ச் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேனிலைப்பள்ளிகளில், கல்லூரிகளில் படிக்கும் தலை சிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு ஊக்க உதவித் தொகை வழங்கி வருகிறது. சம்பந்தப்பட்ட மாணவர்கள், மாணவிகள் இந்திய அளவிலான தனிநபர் போட்டியில் முதல் 3 இடங்களிலும், குழுப் போட்டியாக இருந்தால் முதல் 2 இடங்களிலும் வென்றவர்கள் மட்டுமே இந்த உதவித் தொகை பெற தகுதியானவர்கள். இந்தப் போட்டிகள் அனைத்தும் 1-7-2017 முதல் 30-6-2018ம் தேதிக்குள் நடைப்பெற்றிருக்க வேண்டும்.