புளோரிடா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் சுட்டுக் கொலை

வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். புளோரிடா மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் நுழைந்த 2 நபர்கள் அங்கிருக்கும் பொருட்களை திருட முயற்சித்தனர். இதனை பார்த்த அங்கு பணிபுரியும் கோவர்தன் ரெட்டி என்பவர் அவர்களை கண்டித்துள்ளார். உடனே ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் கோவர்ததன் ரெட்டியை துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்துத் தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அடையாளம் தெரியாத நபர்கள் வணிக வளாகத்தில் இருந்து பொருளையோ பணத்தையோ எடுத்துச் செல்லவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சுட்டுக் கொல்லப்பட்ட கோவர்த்தன் ரெட்டி, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது  விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 5 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். கோவர்த்தன் உடலை இந்தியா கொண்டு வர தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: