இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

சியோல்: இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடி, தொழில் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை வலுவாக உள்ளது எனவும்  பொருளாதாரத்தில் 5 டிரில்லியன் டாலரை விரைவில் இந்தியா எட்ட இருப்பதாகவும் கூறினார். மேலும் இந்தியா தற்போது திறந்த பொருளாதார நாடாக மாறியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 250 பில்லியன் டாலர் அன்னிய நேரடி முதலீட்டை கவர்ந்துள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை வேறு எந்த மிகப்பெரிய பொருளாதார நாடுகளும் எட்டவில்லை. சீர்திருத்தங்களின் விளைவாக தொழில் புரிவதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 77-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வேலை வாய்ப்புகளுக்கான நிலமாக இந்தியா மாறியுள்ளது. இந்தியர்களின் கனவை உணர்ந்து அதை நோக்கி நாம் செயல்படும் அதேவேளையில், ஒத்த கருத்து கொண்ட கூட்டாளிகளை நாடுகிறோம். தென்கொரியாவை உண்மையான இயற்கை கூட்டளியாக நாங்கள் பார்க்கிறோம் என மோடி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: