வத்திராயிருப்பில் 15 அடி மலைப்பாம்பு சிக்கியது

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பில் 15 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வில்வராயன்குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. புதர்களுக்குள் கிடந்த பாம்பு, நேற்று முன்தினம் அவ்வழியாக சென்ற ஒருவரை கடித்தது. இதையடுத்து வத்திராயிருப்பு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமையில் வந்த வீரர்கள் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து நேற்று மீண்டும் வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இதில் பெரும் போராட்டத்திற்கு பிறகு புதர்களுக்குள் மறைந்திருந்த 15 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. அதனை வனத்துறையினரிடம் ஒப்படைக்க தீயணைப்பு வீரர்கள் கொண்டு சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: